(புதியவன்)
பத்தரமுல்லவில் விடுதி ஒன்றில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் பணிபுரிந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும் அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.