முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். சவுந்திரநாயகம் ஜெனாட் (வயது 73) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
புதுக்குடியிருப்பு ஒஸ்கா பாடசாலைக்கு அருகாக, பாண்பெட்டி கட்டிக்கொண்டு பயணித்த மோட்டார்சைக்கிள் அந்த முதியவர் மீது மோதியுள்ளது.
இதன்போது பாண்பெட்டியால் பலமாகத் தாக்கப்பட்ட அவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சையின்போது நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.