வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் செயலாளர் ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு, வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிவித்தலுக்கு அமையவே நேற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆலயம் தொடர்பிலும், அந்த ஆலயத்தை மையப்படுத்தி ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பிலும் அவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.