ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் நேற்று வியாழக்கிழமை(17) இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் சுமார் ஆயிரத்து200 பேரைக் கொன்று 251 பேரை பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய முன்னோடியில்லாத 2023 ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு சின்வார் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
அவரது உயிரிழப்பு இஸ்ரேலுக்கு ஒரு பெரிய வெற்றியைக் குறிப்பதுடன், ஒரு வருட கால மோதலில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுவதாகவும் அவரது மரணம் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்கியதாக மேற்கத்திய தலைவர்கள் தெரிவித்துள்ளர்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸின் தீய ஆட்சியின் வீழ்ச்சியில் அவரது உயிரிழப்பு ஒரு முக்கிய அடையாளமாகும். ஹமாஸ் இனி காசாவை ஆளப்போவதில்லை. ஹமாஸுன் கொடுங்கோன்மையில் இருந்து விடுவித்துக் கொள்ள காசா மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்று கூறினார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் ஈரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்னர், ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக சின்வார் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அவரின் மரணம் குறித்து ஹமாஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.