[புதியவன்] நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாரும் அழைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று நடிகர் சூரி தெரிவித்தார். சூரி, சசிகுமார், உன்னிமுகுந்தன் நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் ஓடுகிறது. மதுரை செல்லூர் கோபுரம் திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தையும், படத்திற்கான ரசிகர்களின் வரவேற்பையும் நடிகர் சூரி நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் சூரியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நல்ல படங்களை மக்கள் தூக்கி கொண்டாடுவார்கள். பெண்கள், குழந்தைகள் ‘கருடன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இப்படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல சினிமாவை மக்களுக்கு கொடுப்பேன். எப்போதும், கதையின் நாயகனாக இருக்க ஆசைப்படுகிறேன். நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாரும் அழைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். ‘விடுதலை 2’ விரைவில் வெளியாகும். கதையின் நாயகனாக வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்பாதையிலேயே போக உள்ளேன்” என்று சூரி தெரிவித்தார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.