நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்றையதினம் கூடவுள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் நேரம் 10.00 நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மு.ப. 11.30 முதல் பி.ப. 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.