குமிழமுனையில் கேணிக்குள் நடந்த சோகம்
முல்லைத்தீவு, குமிழ முனையிலுள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணிக்கள் வயதுச் சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் வழிபாட்டுக்காகக் கோவிலுக்குச் சென்றபோது, இருவர் கேணிக்குள் இறங்கி ஒளிப்படம் எடுக்க முயன்றபோது நீருக்குள் மூழ்கியுள்ளனர். மற்றைய சிறுமி இருவரையும் காப்பாற்ற முயன்றபோதும் அது பயனளிக்காது இருவரும் நீருக்குள் மூழ்கியுள்ளனர்.
நீருக்குள் மூழ்கிய இரு சிறுமிகளும் சில மணிநேரத்தில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், அவர்கள் உயிரிழந்துள்ளனர். ச.ரஸ்மிலா மற்றும் ர.கிருசிகா ஆகிய இரு சிறுமிகளே உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த சிறுமிகள் பூதன்வயல் மற்றும் மாமூலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் 10இல் கற்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உடல்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.