உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா புதிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை உக்ரைனிய ஆயுதப்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 18 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 கின்சல்(Kinzhal) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் உள்ளடங்கும் என உக்ரைனிய ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி மற்றும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
ஆயுத உதவி கோரிய உக்ரைன்
ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட தேவையான ஆயுத உதவி கோரி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நேரடி வருகையை அடுத்து ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் புதிய இராணுவ உதவி தொகுப்புகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.