(புதியவன்)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பித்ததை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
நெல்லியடி பேருந்து நிலையத்துக்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலருக்கும் வழங்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மற்றும் தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.