(இனியபாரதி)
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
1982ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக இந்த மரபு போர் காரணமாக கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டிலிருந்து அது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப).
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.