கொழும்பு ௭ பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் ஏற்றப்பட்டது நினைவுச்சுடர்! குவிக்கப்பட்ட பொலிஸார் (Photos) | Mullivaikal Remembrance Day In Colombo
குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறும் சுடரானது கொழும்பில் ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18.05.2023) உணர்வு பூர்வமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.