பள்ளிக்கூடப் பிள்ளையள் பாவிக்கிற கொம்பா ஸுக்குள்ள புட்ருலர், பாகைமானி, வட்டாரி, செங்கோண முக்கோணி, முக்கோணி, இருகூராக்கி எண்டு ஊரிப்பட்ட சாமான்கள் இருக்கும். அதுக்குள்ள இருக்கிற உந்த இருகூராக்கி ஏன் இருக்கு. எதுக்கு இருக்கு எண்டு கனபேருக்குத் தெரியாது. உண்மையில வட்டாரியில பென்சிலைக் கொழுவி வட்டங்கள். கோடுகள் கீறேக்க பென்சில் சிலவேளை வழுக்கி பிழையா வரப்பாக்கும். அதால சில நுண்ணிய கோடுகள் வட்டங்கள் கீறேக்க. இல்லாட்டி சரியா வரோணுமெண்டால் முதல்ல உந்த இரு கூராக்கி யால மெல்லிசாகீறிட்டு அதுக்குப் பிறகு வட்டாரியால கீற ஒரு சொட்டும் பிழைக்காது. இப்பிடி அந்த இரு கூராக்கியை சரியாப் பாவிச்சால் நல்ல பலன் இருக்கு. ஆனால் 99 சதவீதமானவை அந்த இரு கூராக்கி தங்கட கொம்பாஸுக்க ஏன் இருக்கெண்டே தெரியாமல் அதைக் கடைசிமட்டும் பாவிக்காமலே இருக்கினம்.
இப்ப என்னத்துக்கு இஞ்ச இந்த இருகூராக்கியின்ர கதை? சம்பந்தம் இருக்கு. இஞ்சையுள்ள கன உத்தியோகத்தர்மார் ஏன் இருக்கினம், எதுக்கு இருக்கினம் எண்டு அவைக்கும் தெரியாது. சனத் துக்கும் தெரியாது. அந்த உத்தியோகத்தில உள் ளவை தங்கட கடமைப்பட்டியலில உள்ள வேலை யளைச் சரியாச் செய்தால் சனத்துக்கு கடும் பிரி யோசனம். ஆனால் அப்பிடிச் செய்யிறவை வலு குறைவு. குறிப்பா உந்த சின்னப்பிள்ளையளின்ர விசயங்களைக் கவனிக்கிற. இடைவிலகின மாண வர்களின்ர விசயங்களைப் பாக்கிற உத்தியோகத்தர் மார் மனம் வைச்சு வேலை செய்தால், சிறுவர் துஷ் பிரயோகங்களை நிப்பாட்டலாம். சின்னப்பிள்ளை யள் பிழையான வழியில போறதைத் தடுக்கலாம். ஆனால் ஒப்பீஸுக்கு போனமாம். கதிரையில இருந்தமாம். சம்பளத்தை வாங்கினமாம் எண்டு இருந்தால் இருகூராக்கி கொம்பாஸுக்க பத்திரமா இருக்கிறமாதிரி அப்பிடியே எல்லாம் இருக்க வேண்டியதுதான்.
கிட்டடியில தெல்லிப்பழையில ஒரு 16 வயதுப் பெடியன் தன்ர தாயின்ர கழுத்தை நெரிச்சுக்
கொலை செய்தவன் எண்ட செய்தியைப் பாத்திருப்பியள். அந்தப் பெடியன் கனநாளாப் பள்ளிக்கூடமும் போகேலை. அப்பிடிப் பள்ளிக்கூடம் போகாட்டி அதைப்பற்றி பள்ளிக்கூடக்காரர் 'சைல்ட் ஒப்பீஸ இப்ப என்னத்துக்கு இஞ்ச இந்த இருகூராக் கியின்ற கதை? சம்பந்தம் இருக்கு. இஞ்சையுள்ள கன உத்தியோகத்தர்மார் ஏன் இருக்கினம். எதுக்கு இருக்கினம் எண்டு அவைக்கும் தெரியாது. சனத் துக்கும் தெரியாது. அந்த உத்தியோகத்தில உள் ளவை தங்கட கடமைப்பட்டியலில் உள்ள வேலை யளைச் சரியாச் செய்தால் சனத்துக்கு கடும் பிரி யோசனம். ஆனால் அப்பிடிச் செய்யிறவை வலு குறைவு. குறிப்பா உந்த சின்னப்பிள்ளையளின்ர விசயங்களைக் கவனிக்கிற இடைவிலகின மாணவர்களின்ர விசயங்களைப் பாக்கிற உத்தியோகத்தர் மார் மனம் வைச்சு வேலை செய்தால், சிறுவர் துஷ்பிரயோகங்களை நிப்பாட்டலாம், சின்னப்பிள்ளை யள் பிழையான வழியில போறதைத் தடுக்கலாம். ஆனால் ஒப்பீஸுக்கு போனமாம், கதிரையில் இருந்தமாம். சம்பளத்தை வாங்கினமாம் எண்டு இருந்தால் இருகூராக்கி கொம்பாஸுக்க பத்திரமா இருக்கிறமாதிரி அப்பிடியே எல்லாம் இருக்க வேண்டியதுதான்.
கிட்டடியில தெல்லிப்பழையில ஒரு 16 வயதுப் பெடியன் தன்ர தாயின்ர கழுத்தை நெரிச்சுக் கொலை செய்தவன் எண்ட செய்தியைப் பாத்தி ருப்பியள். அந்தப் பெடியன் கனநாளாப் பள்ளிக்கூட மும் போகேலை. அப்பிடிப் பள்ளிக்கூடம் போகாட்டி அதைப்பற்றி பள்ளிக்கூடக்காரர் 'சைல்ட் ஒப்பீஸ ருக்கு' அறிவிச்சிருக்கவேணும். அந்த ஒப்பீஸரும் வந்து திரும்ப அந்தப் பெடியனை பள்ளிக்கூடத்துக்கு கூட்டியந்து படிப்பிக்கிற வேலையைப் பாத்திருக்க வேணும். ஆனால் பள்ளிக்கூடக்காரர் இப்பிடி ஒரு பெடியன் படிக்க வராமல் நிண்டிட்டான் எண்டு அறிவிச்சும் அதுக்குப் பொறுப்பான ஒப்பீஸர் இதைப் பற்றி ஒழுங்கான நடவடிக்கை எடுக்கேலையாம். அப்பிடி அவை தங்கட கடமையைச் சரியாச் செய்தி ருந்தால் . அந்தப் பெடியன் திரும்ப பள்ளிக்கூடம் போயிருப்பான். அதோட அவன்ர தாயின் உயிரும் தப்பியிருக்கும். ஒப்பீஸை விட்டு வெளிக்கிடாமல் கதி ரையைச் சூடாக்கிறதுதான் தங்கட கடமை எண்டு இருக்கிறவை, தங்கட கடமையளை இனியாவது ஒழுங்காச் செய்வினமோ?
#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.