'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் பரம்பரையில வந்தனாங்கள் எண்டு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லிக் கொண்டு, கௌரவத்தைக் காக்கிறதா நினைச்சு கவிண்டு கொட்டுண்டவை கனபேர். இப்பிடி ஒரு கௌரவம் பாக்கிற வேலையால ஒரு பள்ளிக்கூடமே அந்தரப்படுறது ஆருக்குத் தெரியும்?
தீவகத்தில உள்ள ஊர்காவற்றுறைக் கோட்டம். அங்கையுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில தான் இயங்குது. அந்தப் பள்ளிக்கூடத்துக்கும், கோட்டத்துக்கும் ஒரே கரண்ட்லைன் தான். அந்த கரண்ட்பில் கோட்டத்துக்கு வரும். அதைக் கோட்டக்காரர் வலயத்தில குடுக்க அவை மின்சாரசபைக்கு காசைக் கட்டுவினம். இதுதான் நடை முறை. ஆனால் இப்ப ஒரு நாலைஞ்சு மாதத்துக்கு முதல், திடீரெண்டு 17 ஆயிரம் ரூபா கரண்ட் பில் காசு கட்டேலை எண்டு சிவப்பு நோட்டீஸ் வந்திருக்கு. உடனேயே கோட்டக் கல்விப்பணிப்பாளர் அதைக் கொண்டுபோய் வலயக்காரரிட்ட குடுத்திருக்கிறார். ஆனால் அதுக்குப் பிறகும் வலயக்காரர் வாய்பார்த் தலாலையோ என்னவோ, மின்சாரசபைக்காரர் வந்து அந்தக் கரண்ட் லைனைக் 'கட்' பண்ணிப்போட்டினம். வீடுகளில கரண்டை வெட்டினால், காசைக் கட்டினால் உடனேயே கரண்ட் வந்திடும். ஆனால் இந்த டிப்பார்ட் மெண்டுகளின்ர இழுபறி தெரியும்தானே. ஊர்காவற்றுறைக் கோட்டத்துக்கும். அது இயங்கிற பள்ளிக்கூடத்துக்கும் கரண்ட் வெட்டுப்பட்டு அஞ்சு மாதத்துக்கு மேல ஆகிட்டது. இன்னும் அந்தக் காசும் கட்டுப்படேலை. கரண்டும் வரேலை. ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கிற மீட்டிங்குகளில் இந்தக் கரண்ட் பில்லைக் கட்டி, கனெக்சனை திரும்ப எடுங்கோ எண்டு கோட்டக் கல்விப்பணிப்பாளர் வாய் ஓயாமல் சொன்னதெல்லாம், புறக்குடத்து தண்ணியானதுதான் மிச்சம். உருப்படியா ஒண்டும் நடக்கேலை.
அப்பிடி வலயக்காரர் உந்த 17 ஆயிரம் ரூபா பில்லைக் கட்டாமல் இருக்கிறதுக்குக் காரணம், அவையின்ர கெளரவப் பிரச்சினையாம். வெட்டின கரண்டை திரும்ப குடுக்கிறதெண்டால், அதுக்கு பில் காசை விட மேலதிக தண்டப்பணமா மூவாயிரம் ரூபா கட்டவேணும். அந்தத் தண்டப்பணத்தைக் கட்டினால், 'ஏன் கரண்ட் வெட்டும் வரைக்கும் காசைக் கட்டாமல் இருந்தனீங்கள்? ஆர் அதுக்குப் பொறுப்பு?' எண்டெல்லாம் ஓடிட்காரர் வந்து நாக்கைப் பிடுங்கிற மாதிரிக் கேப்பினமாம். அதுக்காகத் தான் உந்தக் கரண்ட் காசைக் கட்டாமல் இழுத்தடிக்கினமாம். இவையின்ர உந்தக் கோதாரி விழுந்த கௌரவப் பிரச்சினையால, கோட்டக்கல்வி அலுவலகம் இருக்கிற பள்ளிக்கூடப் பிள்ளையள் தான் கஷ்ரப்படு குதுகள்.'ராங்கில' (நீர்த்தாங்கி) ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லை. மோட்டர் வேலை செய்யாமல் எப்பிடி 'ராங்கில' தண்ணி இருக்கும்? குடிக்கிறதுக்கோ, கை கழுவிறதுக்கோ, மலசலகூடம் போறதுக்கோ அந்தப் பிள்ளையளும், ரீச்சர்மாரும் தண்ணியில்லாமல் அஞ்சு மாதமா அந்தரப்படுகினம். அதைவிட இந்த வெக்கைக்கு ஒரு 'பான்' (மின்விசிறி) கூட போட வழியில்லை. ஆனால் பிள்ளையள் தண்ணியில்லாமல் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு எங்கட கௌரவம் தான் முக்கியம் எண்டு இன்னும் வலயம் இதைப் பற்றி கணக்கிலயே எடுக்காமல் இருக்குதாம். நீங்களும் உங்கட கண்டறியாத கௌரவமும்...!
#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.