(இனியபாரதி)
யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரையில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸ் சிறப்பு அதிரடி படையினருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த சிறப்பு அதிரடி படையினர் 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள், ஆர்.பி.ஜி எறிகணைகள் 8 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பனவற்றை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர், மீன்பிடி தேவைக்காக வெடிபொருட்களை உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.