யாழ்ப்பாணம் சிறைச்சாலை பேருந்து மோதியதில் சிற்றூந்தின் சாரதி காயமடைந்த நிலையில் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட் கிழமை பி.ப. 4 மணியளவில் ஊர்காவற்றுறை நாராந்தனையில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ். நகர் நோக்கிப் பயணித்த சிற்றூந்து, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதாகவும், இதன்போது எதிர்திசையில் மந்தைக்கூட்டத்தைக் கண்ட சாரதி சடுதியாக சிற்றூந்தை நிறுத்தியதாகவும், இதனால் பின்னால் வந்த சிறைச்சாலை பேருந்து சிற்றூந்தை மோதியாதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.