(செல்வன்)
வடக்கில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரச விடுதியில் மது அருந்திய விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அலுவலர்களும் வடமாகாண தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள எந்த ஒரு அலுவலகத்திலும் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ரூபினி வரதலிங்கம் கல்வி அமைச்சின் செயலருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்
மேற்படி விடயம் தொடர்பான தங்களது NP/03/02/GA/1/Inquiry ஆம் இலக்க 2024.04.08 ஆம் திகதிய கடிதம் தொடர்பானது,
தங்களாலோ அல்லது மாகாண கல்வி கல்விப்பணிப்பாளராலோ விசாரணைகள் எவையும் இது வரைகாலமும் முன்னெடுக்கப்படவில்லை மாகாண கல்விப்பணிப்பாளரின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உத்தியோக பற்றற்ற விசாரணை என்பதன் ஊடாக குறிப்பிடப்படுவது யாது என்பதும் விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
மாகாண கல்விப்பணிப்பாளரின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதமானது எமக்கு பிரதியிடப்படவில்லை என்பதுடன் தங்களாலும் எமக்கு அறிக்கையிடப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையை தாபன விதிக்கோவையின் இரண்டாம் அத்தியாத்துக்கமைய மேற்கொண்டு அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மாகாண கல்விப்பணிப்பாளரால் தங்களுக்கு முகவரியிடப்பட்ட, NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதத்தில் முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆண் உத்தியோகத்தர்களும் உரிய அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் எமது அலுவலகத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு வதிவிடத்தினுள்ளும் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் ஆளுநரின் செயலாளர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம். மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிமனை, மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் என்பனவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.