யாழ்ப்பாணம் - காக்கைதீவு மீன்சந்தைக்கு அண்மையிலுள்ள வீதியோர கழிவுப்பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டமையால் வீதியால் பயணிப்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
இனந்தெரியாத நபர்களால் இரவு வேளையில் மருத்துவக் கழிவுகள், வியாபார நிலைய கழிவுகள், வீட்டுக் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்கள் வீதியோரங்களில் கொட்டப்படுகின்றன. வீதியெங்கும் துர்நாற்றம் வீசிய நிலையில் இன்றையதினம் யாழ். மாநகரசபை ஊழியர்கள் கழிவுப் பொருட்களை அவ்விடத்தில் வைத்தே தீ மூட்டியுள்ளமையால் வீதியால் சென்ற பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாத நிலைமையும் காணப்பட்டது. விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவியது. (அ-ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.