(புதியவன்)
காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கிலிருந்து நீர் வடிதல் அல்லது மூக்கடைப்பு, தசை மற்றும் உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
இலங்கையில் தற்போது இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறப்பு அவதானம் செலுத்துமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அரச மருத்துவர் ஒருவரை நாடுமாறும் சிறப்பு மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு மருத்துவமனைகள் உட்பட 20 மருத்துவமனைகளில் இன்புளூயன்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய காய்ச்சல் நிலையத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.