(மதவன்)
யாழ்ப்பாணம் - கரவெட்டியிலுள்ள ஆலயமொன்றில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரின் பதவி முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் தலைவரே இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
ஆலயத்தின் நிலையான வைப்பு நெல்லியடியிலுள்ள வைப்பகத்தில் உள்ளது. அதிலிருந்து ரூ.10 இலட்சத்தை கடந்த ஆண்டு ஐப்பசி மாதமளவிலும் ரூ.7 இலட்சத்தை இவ்வாண்டு தை மாதமளவிலும் மீளப்பெற்றுள்ளார். அதற்காக கூட்டறிக்கை மற்றும் பதவி முத்திரையை போலியாக தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவளை மோசடி அம்பலமாகியதும் உபதலைவர், பொருளாளர் ஆகியோர் தாமாகவே முன்வந்து பணத்தை மீளச் செலுத்தியுள்ளனர் .
இவ்விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு வினவிய போது பதவி முத்திரை போலியாக பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.