வடக்கு தலைமைச் செயலாளர் ஆதங்கம்
(ஆதவன்)
இன்றைய கல்விப்புலம் மைதானமாக மாறியுள்ளது. மாணவர்கள் அதில் பந்தயக் குதிரைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாக மாற்றப்படவில்லை.- இவ்வாறு வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்
அரங்கில் நடந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிரேக்கத்தில் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டிஸ் போன்ற பேரறிஞர்கள் ஒரு கல்விப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியது போன்று பேராசிரியர். வித்தியானந்தன் எமது மண்ணில் கல்விப்புலத்தில் ஒரு வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளார். வடக்கு -கிழக்கு மலையக மக்களை இணைத்துச் செயற்பட்ட ஒருவராகவும் அவர் விளங்குகின்றார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.