(ஆதவன்)
20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், காணிகளைப் பதிவு செய்யும் நிகழ்வு மன்னார் சாந்திபுரம் மற்றும் சௌத்பார் கிராமங்களில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
அரசகாணிகளில்நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்காலிக காணி ஆவணங்களைக் கொண் டுள்ள காணி உரிமையாளர்கள், அந்தக் காணிப்பத்திரத்தின் மூலப்பிரதி, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், அடையாள அட்டைப்பிரதி என்பவற்றைச் சமர்ப்பித்து பூரண அளிப்புக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.