(புதியவன்)
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனியும் இன்று காலை 10 மணியளவில் மானிப்பாய் பொதுச் சந்தையில் திருமதி யசோதா சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து திருமதி யசோதா சரவணபவனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கைளும் வழங்கி வைக்கப்பட்டன.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான அனுசன் ,சுபாகர் ,சமூக செயற்பாட்டாளர் வானேஸ்வரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்
தொடர்ந்து இன்று மாலை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பங்குபற்றுதலுடன் தெல்லிப்பழை பேருந்து நிலையத்திலும், நாளை 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துமாறு தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினர் கோரியுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.