(செல்வன்)
மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு மாவட்ட விளையாட்டு அலுவலகர் தலைமையில் இன்று புதன்கிழமை(15) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
போட்டியில் 6 தங்கப்பதக்கங்களையும் 6 வெள்ளிப்பதக்களையும் 3 வெண்கலப்பதக்களையும் முல்லை வீரர்கள் பெற்றிருந்தனர்.
நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலர் சிவபாலன் குணபாலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திட்டமிடல் பணிப்பாளர் சமுர்த்தி அலுவலகர், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.