இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை(16) சங்கானை, சித்தன்கேணி, அராலி, சுழிபுரம், மூளாய் மற்றும் பண்டத்தரிப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்வுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் வேலணைக்கும் நாளை மறுதினம் சனிக்கிழமை காரைநகருக்கும் பயணிக்கும்.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு தமிழரசுகட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினர் கோரியுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.