(இனியபாரதி )
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு முன்னபாக இன்றைய தினம் கல்வி சாரா ஊழியர்கள் ஒன்றுகூடி கவனவீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனவீர்பு போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் பல்கலைக்கழக கல்விசாராப் ஊழியர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.