(இனியபாரதி)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடி மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டடம் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு 4 நாட்கள் பயணமாக வருகை தரும் அரசதலைவர் இம்மாதம் 24ஆம் திகதி இக்கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இந்தக் கட்டடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு பெரிய சத்திரசிகிச்சைக் கூடங்கள், ஒரு சிறிய சத்திரசிகிச்சைக் கூடம், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவப் பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகளும் உள்ளன.
சமகாலப் பொருட்களின் விலை அதிகரிப்பால் கட்டடத் தொகுதி இன்னும் நிறைவுறாமல் இருப்பதுடன் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய ரூபா 130 மில்லியன் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.