ஆசு மாரசிங்க தெரிவிப்பு
(ஆதவன்)
ஒக்ரோபர் முதல் வாரத்தில் அரசதலைவர் தேர்தல் நடைபெறும் என்று அரச தலைவரின் ஆலோசகர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அரசமைப்பின் பிரகாரம் அரசதலைவர் தேர்தலே முதலில் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. அரச தலைவர் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பது உறுதி. ஒக்ரோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும்.
நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் அரச தலைவர்கே உள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழியேற்படுத்தமாட்டார். ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் அரச தலைவர் தேர்தலையே முதலில் கோருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சலூன் கதவும் திறந்தே உள்ளது” - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.