(மாதவன்)
தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுந்தினம் மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கடையினுள் இருந்தவாறு அப்பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது. சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இருப்பினும் ஊடகவியலாளர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை ஊடகவியலாளர் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.
முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு நேற்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை சோதனைக்கு உட்படுத்தி பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளதோடு தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கண்டறிந்தனர் .
அதனைத் தொடர்ந்து உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.