போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது.
வவுனியா பண்டாரிக்குளம் மற்றும் வைரவர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாழக்கிழமை இரவு குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக்கொள்ளமுடியும் என நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
r3xvdj
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.