மன்னார்-மதவாச்சி முருங்கன் பிரதான வீதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையால் அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
முருங்கன் பண்ணையின் பின் பகுதியூடாக இந்த யானை வந்துள்ளது. அது பண்ணையின் சுற்று வேலியை முன்பகுதியூடாக உடைத்துக் கொண்டு மன்னார்-முருங்கன் பிரதான வீதிக்கு வந்துள்ளது. சிறிது நேரத்தின் பின் வீதியை கடந்தது. இதனால் வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகலாக காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.