(புதியவன்)
கற்பிட்டி, கண்டல்களியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் நேற்று திங்கட் கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் இயங்கி வரும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்னாத்தவில்லு பொலிஸ் சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் இயங்கி வரும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழு சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அம்பர் கடலில் மிதந்து கொண்டிருந்த போது கண்டல்குழி மீனவர்களால் மீன்பிடி படகு ஒன்றில் கொண்டுவரப்பட்டு, அதை விற்பனை செய்யும் நோக்கில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் காணிக்குள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அம்பரை கடலில் இருந்து கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வருடன், அதனை வளவுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.