கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்!
(புதியவன்)
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டடம் திறந்து வைத்தமையை எதிர்த்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மருத்துவபீடம் மற்றும் பல்கலைக்கழக பிரதான வளாக வாயிலில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.
கல்விசாரா பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2ஆம் திகதி நண்பகல் முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடைபட்டுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை தீர்ப்பதில் எவ்வித அக்கறையுமின்றி காலம் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய கல்விசாரா ஊழியர்கள், யாழ் போதனா மருத்துவமனையுடன் இணைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டடத் தொகுதி அரசதலைவரால் இன்று திறந்துவைக்கப்பட்டதை கண்டிக்கும் நோக்கத்திலும் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலுமே இந்த கண்டனப் போராட்டத்தை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.