[புதியவன்]
வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐம்பது வயதுடைய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரதன்மடுவ, கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கப்பட்டுள்ளது .
மின்சாரம் தாக்கிய நிலையில் இவரை கபித்திகொல்லேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.