விடுமுறையில் இருந்த மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பயணித்த கெப் ரக வாகனம் மன்னார் பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது. வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த குறித்த கெப் ரக வாகனம் நேற்று மதியம் மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்துக்கும் இடையில் உள்ள பறவைகள் சரணாலயத்தின் அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்ககளில் விடுமுறையிலிருந்த மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலதிகவிசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
gmv2ty
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.