யாழ். மாவட்டச் செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமான யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர், யாழ். மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர், யாழ்ப்பாணத்திலுள்ள 15 பிரதேச செயலர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், பணிமனைத் தலைவர்கள் என இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை தலைமையாகக் கொண்ட பணிமனைகள் அனைத்தும் புறக்கணித்துள்ளன.
யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் (நிர்வாகம்) ம.பிரதீபனும் மற்றொரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமே கூட்டத்தில் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.