இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் பாம்பை கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் , மூன்று வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் இருந்து ஒரு சிறிய பாம்பு அவர் முன் வந்தது.
இதையடுத்து அக்ஷய் பாம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றார். அதன் பிறகு, அவர் கத்த ஆரம்பித்தார்.
சிறுவன் வாயில் பாம்பு சிக்கியதைக் கண்டு குழந்தையின் பாட்டி பதறிப் போனார். உடனடியாக குழந்தையின் வாயிலிருந்து பாம்பை வெளியே எடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண்ணும், அவரது உறவினர்களும் குழந்தையை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளித்த பின், மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.