(புதியவன்)
வவுனியா - ஓமந்தை புதியவேலர் சின்னக்குளத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரவேற்பறை சுவரின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதுடன் இவ் விபத்தில் 2 மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.