தப்பாட்டம் சுவரொட்டியை பகிர்ந்த எலான் மஸ்க்!
தப்பாட்டம் சுவரொட்டியை பகிர்ந்த எலான் மஸ்க்!


[புதியவன்]

உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் சுவரொட்டியைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார்.

மேலும், டெஸ்லா நிறுவனத்தின் அதிபரான இவர் இலத்திரனியல் மகிழுந்து தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வந்த நிலையில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதை தொடர்ந்து தனது நிறுவனத்துடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களை வம்புக்கிழுப்பதை வழக்கமாகவே கொண்டவர் தான் எலான் மஸ்க். இவர் தினமும் எக்ஸ் தளத்தில் பதிவுகள் பதிவிட்டு கொண்டே வருபவர் ஆவார்.

இந்நிலையில், தற்போது இரு பெரிய நிறுவனங்களான அப்பிள் – ஓபன் ஏஐ நிறுவனங்களை அவர் தற்போது சீண்டி இருக்கிறார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் அப்பிள் நிறுவனம், தங்களது மக்புக், ஐபோன், ஐபோட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ இயக்கிகளை இனி பயன்படுத்தலாம் என அப்பிள் சிஇஓ டிம் குக் (CEO Tim Cook) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், அப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் (Open AI) பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடைவிதிப்பதாக” தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மீம் (Meme) ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தப்பாட்டம் படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் குடிக்கும் சுவரொட்டி தான் அது. தற்போது, இந்த மீமை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தை கலாய்த்து இருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இந்த சம்பவமானது பார்வையாளர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. [எ]

262 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.