(ஆதவன்)
அச்சுவேலி, கதிரிப்பாயிலுள்ள கடையொன்று உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. உண்டியலில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.