தென்னிந்திய நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குறித்த பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் புகார் மனு ஒன்றை அளித்தார். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் இணைய வாயிலாக புகாரளித்தார்.
போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டதுடன் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.