மின்கட்டணம் குறைப்பு எதிரொலி பொருட்கள், சேவைகளின் கட்டணத்தைக் குறைக்குக;
மின்கட்டணம் குறைப்பு எதிரொலி பொருட்கள், சேவைகளின் கட்டணத்தைக் குறைக்குக;

அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!!!

அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20 சத வீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, மின்கட்டணம் குறைக்கப்படும் அதே தினத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர வர்த்தக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.


மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை மிகப்பெரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அமைச்சர் விஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்ரோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மின் கட்டணக் குறைப்புக்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த காலங்களில் வங்கி வட்டி விகிதம் 36 சதவீதம் வரை அதிக ரித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிலவி வருவதால், நிலக் கரி மற்றும் உலை எண்ணெய் விலையும் அதிகரித்தது. அமெரிக்க டொலருக்குச் செலுத்தவேண்டிய தொகை அதிரடியாக உயர்ந்தது.

இதன்படி, 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களைப் பொறுத்தவரை, மழை வீழ்ச்சியும் அதிகரித்துள்ளது. அதனால், நீர் மின் உற்பத்தி அதிகரித்தது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், உமா ஓயா நீர்மின் நிலையத்தின் மின்சாரம் தேசிய உற்பத்திக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களில், இலங்கை மின்சாரசபை செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மின் சாரசபைக்கு எந்த ஒரு ஊழியரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேவைப்பாடுள்ள 26 ஆயிரம் ஊழியர்களுக்குப் பதிலாக, இன்று 22 ஆயிரம் ஊழியர்கள் மாத்திரமே உள்ளனர். மேலும், செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது- என்றார். (ச)

78 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.