நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை என இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,இலங்கை வங்கியில் தடயவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,புதிய கொடுப்பனவு கருவிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நாட்டு மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தர்மஸ்ரீ குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.