கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று(07) செவ்வாய்க்கிழமை காலை முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் எனினும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.