ஹுங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் நீராடச் சென்றநிலையில் 06/03/2023 அன்று அதாவது நேற்றைய தினம் நீரில் மூழ்கி பரிதாபகரமாகஉயிரிழந்துள்ளார்.
குறித்த கடற்பரப்பில் இரு வெளிநாட்டு பிரஜைகள் மது அருந்திவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.இவர் ரஷ்ய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் பிரதேசவாசிகள் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 47 வயதுடையவராவார். சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.