தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் 2 ஆம் பாகம் எடுப்பது வழமையாகி விட்டது. இந்த நிலையில் தெலுங்கு திரைப்படமாகிய 'ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே' படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி 2007 இல் திரைக்கு வந்த இத் திரைப்படத்தில் வெங்கடேஷ், திரிஷா நடித்து இருந்தனர். படம் வெற்றி பெற்றமையால் ”யாரடி நீ மோகினி” எனும் தலைப்பில் தனுஷ், நயன்தாரா தமிழில் நடித்திருந்தனர்.
தற்போது திரிஷா, "ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே 2 ஆம் பாகத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என கருத்து வெளியிட்டுள்ளார். எனவே இந்த படத்தின் 2 ஆம் பாகம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.