கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முயற்சித்த 2500 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு 900 ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.