கொழும்பு - மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நேற்று மாலை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவியும் மகளும் முச்சக்கரவண்டியில் அங்கு வருகை தந்துள்ளனர்.
அப்போதே நீதிமன்றத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.