கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா மற்றும் ஷகினா ராஜேந்திரம் தம்பதிகளுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கரு முழுமையாக முதிர்ச்சி அடையாமல் 22 வாரங்களிலேயே அதாவது கருவுற்று 126 நாட்களில் பிறந்து, ஏடியா நடராஜாவும் ஏட்ரியல் நடராஜாவும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, 2022 மார்ச் 4-ஆம் திகதி பிறந்துள்ளனர்.
குழந்தைகளின் தாய் இது தொடர்பில் கூறுகையில், தனக்கு 21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் பிரசவம் தொடங்கியபோது, குழந்தைகள் காப்பாற்றப்பட சாத்தியம் இல்லை என்றும் "உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 0 சதவீதம்" இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
கடுமையான இரத்தப்போக்கு இருந்தபோதும், இன்னும் சில மணி நேரத்திற்கு குழந்தைகளை வயிற்றினுள்ளேயே வைத்திருக்க தம்மாலான முழு முயற்சியை செய்ததாக அவர் கூறினார்.
அதனையடுத்து, 22 வாரங்களுக்கு இரண்டு மணி நேரம் பிந்தி குழந்தைகள் தாயின் கருவைவிட்டு வெளியில் வந்துள்ளன.
தொடக்கத்தில் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகவும் ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த நிலைமை மாறியதா கவும் தெரிவித்துள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.