நாட்டை படுகுழியில் தள்ளியவர்களே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
எத்தகைய புள்ளி விபரங்களை அரசாங்கம் வெளியிட்டாலும் நாடு பொருளாதார ரீதியாக மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதையே உண்மையான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி உலகம் சுற்றும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இவர் யாருடன் செல்கிறார்?.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனே வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
கடந்த காலத்தில் நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த பயணத்தில் நேரடியாக தொடர்புற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் அமர்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் உட்பட பல முக்கிய உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ள பின்புலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.