எதிர்வரும் ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்களின் வரியை கிலோ ஒன்றிற்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு விதித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நலன்புரி நிலையங்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களிடமிருந்து எந்தவித அந்நிய செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக வழங்கப்படுகின்ற பேரீச்சம்பழங்களுக்கு மாத்திரம் இந்த வரிச்சலுகை செல்லுபடியாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.